நாம் பிரிந்ததற்கு
பெரிய காரணம்
எதுவுமில்லை
சேரலாம் எனும்போது
அதிகமாகி இருந்தது
காரணங்களின் கூட்டுத்தொகை
-ராஜா சந்திரசேகர்
நாம் பிரிந்ததற்கு
பெரிய காரணம்
எதுவுமில்லை
சேரலாம் எனும்போது
அதிகமாகி இருந்தது
காரணங்களின் கூட்டுத்தொகை
-ராஜா சந்திரசேகர்
கவிதை, சுட்டது.... இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
குருடன் பார்க்கிறான்
செவுடன் கேட்கிறான்
முடவன் நடக்கிறான்
அரவாணி புள்ளை பெக்கிறான்
பிராத்தனை
கூட்டத்திற்குப்
போக முடியாமல்
மூட்டு வலியால்
படுத்திருக்கிறார்
போப்பாண்டவர்.
-ந.முத்து
கவிதை, சுட்டது.... இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
இறந்த போன மனிதர்கள்
உயிருடன் இருப்பதாய்
பாவ்லா செய்கிறார்கள்.
தெருவெங்கும் இவர்களது கூட்டம்
தங்களை தாங்களே ஏமாற்றி கொண்டு
-சாய்ராம்
கவிதை, சுட்டது.... இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நேசிப்பதற்கான
காரணங்களை பட்டியலிடுகிறவர்களை
நான் நேசிப்பதில்லை
நேசத்தைப் பட்டியலுக்குள்
அடைக்க அல்ல அடக்கத் துடிப்பவர்கள்
பின்வருங்காலங்களில்
பட்டியலுக்காக நேசத்தையும்
அடக்கம் செய்துவிடுவார்கள்
-யுகபாரதி
கவிதை, சுட்டது.... இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நான் பெண்களை மோசமானவர்களாகக்
கருதுவது, அவர்களின் நடத்தையினால் அல்ல
அன்பினால்
அன்பினால் எல்லா மோசத்தையும்
செய்துவிடுகிறார்கள்
சமயத்தில் மோசத்தையே அன்பாகவும்
-யுகபாரதி
கவிதை, சுட்டது.... இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நான் கண்ட பொக்கிஷம் நீ…….
காலங்கள் கடந்தாலும்
கடவுளின் அதிசியத்தில் நான்
கண்ட அனுபவம் நம் நட்பு…
அப்படி ஒன்றும் ஆழம் இல்லை
ஆனால் நம் நடப்புக்கு இணையில்லை ….
எத்தனை சண்டைகள் போட்டாலும்
அத்தனையும் நம் நட்பின் வ்ழுவிர்க்காய்…..
நனையாத கால்கள் கடலுக்கு நட்பு இல்லை
உன்னை நினையாத நினைவுகள்
எனக்கு சொந்தம் இல்லை….
நான் கண்ட பொக்கிஷம் நம் நட்பு…………
மயிலுக்கு போர்வை தந்தவன்
மரபிலே வந்தவன் தானே நீ…
அதனால் தானோ !
அறியாத என்னிடமும்
அன்பை பொழிகிறாய்….
உண்மையானதும்
உணரகூடியதுமான ஏதோ
ஒன்று உண்டென்றால்
அதுதான் நட்பு ……..
நட்பு வலைக்குள்
என்னுடைய தோட்டத்தில்
நட்பாய் நான் வளர்க்கும்
பூக்களில் ….
நண்பனாய் நீ வளர்ந்தாய்….
எல்லா பூக்களையும் விட
ஒரு புதுமையான – பூ
உன் அன்பு!
கவிதை உதவி : திருமதி. துர்கா
சுட்டது.... இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது கவிதை | 1 மறுமொழி »
உனக்காக எதையும்
செய்கிறேன் என்கிறேன்…..
நீயோ
தியாகம் செய்ய சொல்கிறாய்
காதலை…….
**
அவளுக்காக
சேர்த்து வைத்த
அனைத்தும்
பத்திரமாக உள்ளது……
கூடவே
அவளுடைய அழைப்பிதழ்
சில கண்ணீர் துளிகளுடன்
**
அவனும் என்னைப்போல் ஒருவன் தான் என்று….
பார்க்கும் போதெல்லாம் தோன்றுகிறது…….
பல நாள் தாடி……..சோகம் அப்பிய முகம்….
எப்போதும் எங்கோ வெறிக்கும் பார்வை……
எதைபற்றியும் கவலையில்லாத நடை
ஹ்ம்ம் அவனும் என்னை போல் ஒருவன்தான்
யாரையாவது காதலித்து ஏமாந்திருக்க கூடும்……..
**
கண்ணீரை துடைத்த
அதே கைகள்தான்
கண்ணீரை வரவழைத்தது
அழ வைத்தது……….
என்னை
சிறை வைத்தது……….
**
என்னிடம் இருந்திருந்தால்….
உன் பெயர் சொல்லி
துடித்துக்கொண்டிருக்கும்…..
குப்பை தொட்டியில் கிடக்கும்…..
நீ தூக்கி எறிந்த
எனது இதயம்……
**
என்னை புரியாமல்
விலகிசென்றாய்
என நினைத்தேன்…..
உன்னையே
உனக்கு புரியவில்லை
என உன் கண்ணீரில் கண்டேன்
**
புன்னகை மட்டுமே
அறிமுகம் எனக்கு….
உன்னை காணும் வரை…..
கண்ணீர் மட்டும் சொந்தம்….
எனக்கு ….
நான் சாகும் வரை……
**
இனி வாழவில்லை என
எண்ணி இருந்தேன்…..
வந்தாய்..நீ வாழ்வாக…..
இனி சாவில்லை என
எண்ணி இருந்தேன்…
சென்றாய் நான் பிணமாக…..
என்னுடையவை, கவிதை இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது சொந்தகவிதை | Leave a Comment »

என் வசம் நீ…
இல்லையென்றால்
மண்வசம் நான்…..
*
விதை நீயாக இருப்பாய் என்றால்……
மண் நானாகிறேன்……
கனி நீயாக இருப்பாய் என்றால்……
நான் பூவாகிறேன்……..
உயிர் நீயாக இருப்பாய் என்றால்……
நான் கருவாகிறேன்……
காதலி நீயாக இருப்பாய் என்றால்
நான் காதலனாகிறேன்….
*
வாழ்நாள் முழுமைக்குமான
இன்பம் உன் பார்வையில்
இறந்தாலும் உயிர் கொள்ளும்
நினைவுகள் உன் காதலில்
என்னுடையவை, கவிதை இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது சொந்தகவிதை | 2 மறுமொழிகள் »
இருக்கிறாய்
என்னுள் நீ….
என இருந்தேன்…..
இல்லை
உன்னுள் நான்
என்றாய் இறந்தேன்..
என்னுடையவை, கவிதை இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது சொந்தகவிதை | Leave a Comment »
கண்ணழகி கண்ணிரெண்டும் ஏற்காடு….
கன்னியவள் நெஞ்சமது பூக்காடு …..
காதலிக்க செய்துவைத்தேன் ஏற்பாடு…..
களட்டிவிட்டா ஆகிபுட்டேன் கருவாடு……
கடைசியில ஏந்தவிட்டா திருவோடு…..
இனி வாழ்க்கையைத்தான் கடக்குறது பெரும்பாடு….
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொந்த கவிதை ………………..பீளிங்க்ஸ்ல இருக்கும் போது கமென்ட் வராது ….கண்ணீர்தான் வரும் மாமு …..
என்னுடையவை, கவிதை இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது சொந்தகவிதை | Leave a Comment »